டாக்டர் அம்பேத்கார் கூறுவதில் என்ன தவறு இருக்க முடியும்?

அறிஞர் அண்ணா, திராவிடநாடு - 03.12.1944

SG
1 min readApr 13, 2020

ஆரியர்களால் வடமொழியில் எழுதப்பட்ட நூல்களெல்லாம் நூற்றுக்கு நூறும் அவர்களுடைய ஆதிக்கத்தை எல்லாத்துறைகளிலும் உயர்த்தவும், ஆரியரல்லாதாரைத் தாழ்த்தி அடிமைப்படுத்தவுமே எழுதப்பட்டதென்பதை, நாம் பலகாலமாகப் பேசியும் எழுதியும் வந்திருக்கிறோம். நாம் மட்டுமல்ல, மேல் நாட்டு பேரறிஞர்களான கால்டுவெல், இ.ஜெ.சாபின்ஸன், சார்லஸ், இ.கவர், ஆகியவர்கள் இந்தியாவைப் பற்றி ஆங்கிலத்தில் எழுதிய நூல்களில் எல்லாம் இவ்வுண்மைகளை நன்கு தெளிவுபடுத்தியுமிருக்கின்றனர் என்பதை ஆராய்ச்சி உலகம் நன்கு அறியும்.

நாம் நாட்டில் ஒரு சாதியினர் உழைப்பற்ற உயர்ந்த வாழ்வில் இருக்கவும், மற்றச் சாதியினர் உழைத்தும் உண்ண உணவின்றி ஊசலாடவும் காரணமாக நிற்பவை ஆரியர்களால் எழுதப்பட்ட நூல்களே என்பதையும் நாம் பன்முறை எடுத்துக் காட்டியிருக்கிறோம். இந்த உண்மையையே டாக்டர் அம்பேத்கார் அவர்களும் அண்மையில் எடுத்துக்காட்டியுள்ளார். ஆரிய வேதங்களும் கீதையுமே நம்மவர்களுடைய முன்னேற்றத்திற்கு பெரும் தடைகற்களாக உள்ளனவென்பதைத் தெளிவாக விளக்கியுள்ளார். இந்நூல்கள் தாழ்த்தப்பட்ட மக்களை அளவு கடந்த முறையில் தாக்கியிருக்கின்றனவென்பதைத் தெளிவாக விளக்கியுள்ளார். இந்நூல்கள் தாழ்த்தப்பட்ட மக்களை அளவு கடந்த முறையில் தாக்கியிருக்கின்றன என்பதை அறிவுறுத்தியதோடு இங்ஙனம் ஒரு சாராரை உயர்த்தியும் இன்னொரு சாராரைத் தாழ்த்தியும் எழுதப்படும் நூல்கள் எந்த வகையிலும் தெய்வீகம் பொருந்தியதாக இருக்கமுடியாதெனறு டாக்டர் அம்பேத்கார் கூறுவதில் என்ன தவறு இருக்க முடியும்.

வேதங்களில் நூற்றுகணக்கான சுலோகங்கள் திராவிடர்களை அழித்துத் தங்களை உயர்ந்த நிலைக்குக் கொண்டுவரவேண்டுமென்று ஆரியர்கள் இந்திரனை நோக்கி வேண்டிக்கொள்ளும் பாடல்களாகவே உள்ளன. இந்த உண்மைகள் வேதங்கள் மறைகளாக, அதாவது மறைபொருளாக, இன்னம் விளக்கமாகச் சொல்லவேண்டுமானால் வேதங்களில் உள்ள உண்மைகளை வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்படாமல் இருந்தவரையில், அவைகளுள் என்னென்ன கூறப்பட்டுள்ளன என்பது பிறருக்குத் தெரியாதிருந்தது. அவை பல மொழிகளில் மொழிபெயர்க்கும் வாய்ப்புக் கிடைத்த பின்னர் - அவை எதற்காக எழுதப்பட்டதென்பதைத் தெரிந்தபின்னர், டாக்டர் அம்பேத்கார் மட்டுமல்ல, அவ்வேதப்பொருட்களால் அடிமைப்பட்டு அல்லற்படும் ஒவ்வொருவரும் அவற்றைத் தங்கள் நூலாக ஒரு போதும் ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள் என்பதை நாம் வலியுறுத்திக் கூறுகிறோம்.

(திராவிடநாடு - 03.12.1944)

மூலக்கட்டுரை http://www.annavinpadaippugal.info/katturaigal/ithilenna_thavaru.htm

Sign up to discover human stories that deepen your understanding of the world.

Free

Distraction-free reading. No ads.

Organize your knowledge with lists and highlights.

Tell your story. Find your audience.

Membership

Read member-only stories

Support writers you read most

Earn money for your writing

Listen to audio narrations

Read offline with the Medium app

SG
SG

Written by SG

Engineer | Rationalist | ARRian | SGian | யாதும் ஊரே யாவரும் கேளிர் | பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | Author/Translator - http://amzn.to/3ERsXGg | Hypocrite

No responses yet

Write a response